Monday, October 11, 2010

நீயும் ஒரு குழந்தை தான்
மடி மீது சாய்கையில்
நீயும் ஒரு கவிதை தான்
நான் உன்னை ரசிக்கையில்
நீயும் என் இதயம் தான்
நான் நிமிடத்திற்கு ஒரு முறை துடிக்கையில் ...
துயரம் என்று தலைசாய்க்க
இவள் தோள்கள் இருக்கையில்
துண்டில் மீனாய் துவள்வது ஏன்?
கண்ணீரால் கண் பேச
இவள் கரம் நீட்டி அதை துடைக்க
காயங்கள் மருந்திடு
சோகங்கள் மறந்திடு...
நீரோடை போல் இவள் மனம்
எங்கோ செல்ல
கடலாய் நீயே சிறை எடுத்தாய்
விரிந்திடும் என் சிறகுகளுக்கு
காற்றாய் உயிர் கொடுத்து
பறக்க செய்தாய்
பூக்களை மொய்த்த வண்டுகளாய்
உன் வண்ணங்களை சுவடாய்
பதித்தாய் என் மனதில்..
என்னில் விழும் கோபகனலுக்கு
உன் மௌனத்தை விடையகாதே
கனலை ஏற்கும் என் இதயம்
மௌனம் மட்டும் ஏற்க மறுக்கிறது..
பன்னிரு வருடத்தில்
பூக்கும் குறிஞ்சியாய்
என் வாழ்வில் நீ
சோகங்களில் தலை சாய்த்தேன்
உன் தோளில்
ராணங்கள் பல மறைந்தன
உன் பேச்சில்
யாவும் நீ ஆனாய்
என் வாழ்வில்
அன்பின் மொழியாய்
பண்பின் உறைவிடமாய்
என்னுள் நின்றாயே தாயுமானவனே!!!
உன் இணையில்லா
அன்பில் தஞ்சமிட
அனுமதிப்பாயா??? என் அன்பே !!!

Tuesday, September 7, 2010

பார்க்கும் முன்பே துடிக்கும்
என் கண்கள்
எனை கவர்த்த கள்வன்
கானலோ??? கங்கை நீரோ ???
எனும் கேள்வி கனலில் !!!!!!

Wednesday, July 7, 2010

விழி விழும்பில் உன் கண் அசைகையில்
என்னை ஏன் தொலைதேன்?
உன் நுனி விரல் பிடித்து நடக்கும் சமயம்
என்னை ஏன் மறந்தேன்?
உன் சீறிடும் கோபத்தின் முன்
என்னை ஏன் மழலையாய் எண்ணி நகைத்தேன்?
உன் மலரின் முகம் கொண்ட புன்னகையில்
என்னை ஏன் மயங்கி நிற்க செய்தாய்?
உன் உணர்வோடும் உயிரோடும் கலக்கதானோ
என் உயிரே !!!!!!!!


Saturday, March 27, 2010

நீ சுடுவாய் என்று தெரிந்தும்
மெளுகாணேன்- உன்னை நினைத்து
உருகும் நொடிக்காக ஆனால்
நீயோ அன்பால் சுடாமல்
கோபத்தால் சுட்டாய்.....
ஆகினும் அன்பாய் ஏற்று
கொண்டு உன் காலடியில்
உருகி கிடந்தேன்
மீண்டும் உன் அன்பால்
உயிர் கொடுப்பாய் என ..
>>>இந்து<<<

Monday, January 11, 2010

அன்பும் ஆயுதமே
அளவின்றி போனால் .....
அன்பும் நிலை மாறும்
சுயநலம் புதைந்த உலகம் இது ......
அன்பும் வீண்
உறவும் வீண்
நட்பும் வீண்
எல்லாம் வீண்
****இந்து***
உயிரும் மெய்யுமாய்
சொற்கள் இருக்க
இவை தேடாமல்
மனம் உன்னை தேடிற்று...மௌனம்
உயிரயும் மெய்யுமாய்
கலந்த இதயங்கள் மட்டுமே
பரிமாறும் ஒரு இனிய மொழி ....
உதடுகளை ஊமையாகி
மனதோடு மனம் பேசும் ...மௌன ராகம் .....
***இந்து***

Sunday, January 10, 2010

என் மனம் என்ன பாறை கற்கள
உளி கொண்டு அடிபதற்கு ....
வார்த்தைகள் முற்களாய் குற்ற
மனமும் ரணம் ஆனதே....
முட்கள் நடுவே உள்ள பூப்போல்
என் மனம் கிழித்து எறிந்தாய்
உன் வார்த்தை என்னும் அம்பு
தொடுத்து .....போதும் போதும் ...
இனியும் ஒரு சொல் கேட்க
சருகை உடைந்து மண்ணாய் போவேன்
போதும் போதும் ......
உன் அனல் விடும் கோபம் ....
................இந்து ...........

Friday, January 8, 2010

புரியாதவர்களுக்கு குத்தும் முள்ளன இவளோ
புரிந்தவர்களுக்கு பூவனால் -இந்து
விரல் திண்ட வீணை இவளோ
விடை இல்ல கேள்வி இவளோ
இலக்கணம் இல்ல கவிதை இவளோ
தன் வாழ்கைக்கு இலக்கணம் தேடினால் ..
தேடலின் ஆரம்பம் இது முடிவல்ல ..
முடிவை தேடி தினம் தினம் ......
:::இந்து:::

Thursday, January 7, 2010

மண்ணில் கண்டேன் மனிதனின் போராட்டம்
மனத்தில் கண்டேன் தினம் தினம் போராட்டம்
துயிலில் கண்டேன் கனவில் போராட்டம்
போராட்டம் போராட்டம் என்று போராடினேன்
ஆறடி நிலத்திற்கும்
மண்ணில் ஆரம்பித்து மண்ணிலே
முடித்தான் மனிதன் ...........இந்து .......