Saturday, August 13, 2011

கல்லாய் இருந்தேன்
செதுக்கி சிற்பமகினாய்
நீயே உளி கொண்டும் உடைத்தாய்
உடைந்தாலும் உன் பேர் சொல்லும்
சிற்பம் என்று அறியாமல்
உடைந்த நான் மீண்டும்
கல் ஆகவில்லை
கரைந்தேன் கண்ணீரில்
ஊமையாய் !!!!

Saturday, June 18, 2011


அழகிய உன் தோகையை
பார்த்து ரசித்த அவள் தான்
ஒன்று ஒன்றாய் சிறகு ஒடித்தால்
நீ ஆனந்தமாய் பறக்க வேண்டாம்
என்பதற்காகவா ? ? ?
யார் அறிவார் !!!
விடை தேடும் இவள் - இந்து !!!

Tuesday, April 19, 2011

அழகிய சோலையில் கூவிடும் குயிலும்
மலர்களின் இடையே ரிங்கமிடும் வண்டும்
தொடுவானம் துவங்கி கரை தொடும் அலையும்
ஏழுசுரம் சேர்த்து இயற்றிய இசையும்
என்னவளின் கரம் தொட்டு விளையாடும்
வளையலேசையில் மறந்து போனதே!!!!!!
##இந்து##

Friday, April 1, 2011

முழு நிலவின் சயலோ
இவள் முகம்
குளிர்ந்திடும் பௌர்ணமி
இவள் சிரிப்பு
மயிலின் தோகையே
இவள் கூந்தல்
ரோஜாவின் இதழே
இவள் செவ்விதழ்
மௌனமே மொழியாய்
இவள் பேச்சு
பிரம்மன் படைத்த
காவியமாய் மண்ணில் இவள் !!!!!!

Monday, October 11, 2010

நீயும் ஒரு குழந்தை தான்
மடி மீது சாய்கையில்
நீயும் ஒரு கவிதை தான்
நான் உன்னை ரசிக்கையில்
நீயும் என் இதயம் தான்
நான் நிமிடத்திற்கு ஒரு முறை துடிக்கையில் ...
துயரம் என்று தலைசாய்க்க
இவள் தோள்கள் இருக்கையில்
துண்டில் மீனாய் துவள்வது ஏன்?
கண்ணீரால் கண் பேச
இவள் கரம் நீட்டி அதை துடைக்க
காயங்கள் மருந்திடு
சோகங்கள் மறந்திடு...
நீரோடை போல் இவள் மனம்
எங்கோ செல்ல
கடலாய் நீயே சிறை எடுத்தாய்
விரிந்திடும் என் சிறகுகளுக்கு
காற்றாய் உயிர் கொடுத்து
பறக்க செய்தாய்
பூக்களை மொய்த்த வண்டுகளாய்
உன் வண்ணங்களை சுவடாய்
பதித்தாய் என் மனதில்..